வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

நவகிரஹம்


நவகிரஹ வழிபாடு
நவகிரஹங்கள் பற்றிய முழுமையான விளக்கங்கள்
சூரியன் (ஞாயிறு)
சூரியனுக்குரிய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்க வேண்டும். சூரியனுக்கு அதிபதி சிவன் என்பதால் சிவன் கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதோடு நவக்கிரக சந்நிதியை வலம்வந்து சூரிய பகவானை நோக்கி
navakirakam

பதிகங்கள்
காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி !

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியா போற்றி, வினைகள் களைவாய்!

ஸ்லோகம்
ஜபாகுஸும ஸங்காசம்
     காஷ்ய பேயம் மஹத்துதிம்!
தமோரிம் ஸர்வபாபக்னம்
     ப்ரனதொஷ்மின் திவாகரம்!!

சூரிய காயத்ரி
அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!!

என்று ஸ்தோத்திரம் சொல்லி வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால் உடற்பிணி கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். ஜாதகத்தில் கிரக தோசமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தல் வேண்டும்.

ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி
.

சந்திரன் (திங்கள்)
navakirakam

சந்திர தோசம் உள்ளவர்கள் சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று

பதிகங்கள்
அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்மேரு
மலைவல மாகவந்த மதியமே போற்றி போற்றி !

 எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
 திங்களே போற்றி, திருவருள் தருவாய்
 சந்திரா போற்றி, சத்குரு போற்றி
 சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!

ஸ்லோகம்
ததிசங்க துஷாராபம்
       க்ஷீரொர்தார்னவ ஸம்பவம்!
நமாமி ஸசிநம் ஸோமம்
        சம்போர் மகுடபூஷணம்!!

சந்திர காயத்ரி
நிசாகராய வித்மஹே! கலாநாதாய தீமஹி!!
தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!

என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்கள்

ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.



செவ்வாய் (அங்காரகன்)
செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று
navakirakam

பதிகங்கள்
வசனநல் தைர்யத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள்நிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி !

 சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
 குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
 மங்கள செவ்வாய் மலரடி போற்றி
 அங்காரகனே அவதிகள் நீக்கு!

ஸ்லோகம்
தரனி ஹர்ப்ப ஸம்பூதம்
        வித்யுத் காஞ்சன ஸந்நிபம்!
குமாரம் சக்தி ஹஸ்தஞ்ச
        மங்களம் ப்ரனமாம்யகம்!!

அங்காரக (செவ்வாய்) காய்த்ரீ
அங்காரகாய வித்மஹே! பூமி பாலாய தீமஹி!1
தந்நோ குஜ ப்ரசோதயாத்!!

என்று தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோசநிவாரணம் ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும், இரத்த சம்பந்தமான நோய்களும் நீங்கும் . வெற்றி கிட்டும்.

ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்

புதன்
புதனை வழிபடுவதால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும். புதன் கிழமையன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரகங்களை வணங்கி புத பகவான் முன்
navakirakam

பதிகங்கள்
மதனநூல் முதல்நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பசு பாக்கியம் சுகம்வபல கொடுக்க வல்லான்
புதன் கவி புலவன் சீர்மமால் பொன்னடி போற்றி போற்றி !

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!

ஸ்லோகம்
ப்ரியங்கு களிகா ஷ்யாமம்
        ரூபேனா ப்ரதிமம் புதம்!
ஸௌமியம் ஸௌமிய குனோபேதம்
       தம்புதம் ப்ரனமாம்யகம்!!

புதன் காயத்ரீ
புதகிரஹாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ ஸௌமிய  ப்ரசோதயாத்!!

என்று ஸ்தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புக்களும் பொருந்தி வரும்.

ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்

குரு (வியாழன்)
குரு தோசமுள்ளவர்கள் மட்டுமன்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் நவக்கிரகங்களை வலம்வந்து வியாழ பகவானை நோக்கி
navakirakam

பதிகங்கள்
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர்ப்பாதம் போற்றி !

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!

ஸ்லோகம்
தேவாநாஞ்ச ரிஷி நாஞ்ச
          குரும் காஞ்சந ஸன்நிபம்!
புத்தி பூதம்திரிலோகாநாம்
           தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

குரு (வியாழன்) காயத்ரி
ஸுராச்சார்யாய வித்மஹே! சுரஸ்ரேஷ்டாய தீமஹி!!
தந்நோ குரு ப்ரசோதயாத்!!

என்னும் ஸ்தோத்திரம் பாடி வணங்க வேண்டும். இவ்வாறு விரதத்தை மேற்கொள்ளுவதன் பலனாக
நல்வாழ்க்கை, நன்மக்கட்பேறு கிடைக்கும்.

ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி


சுக்கிரன் (வெள்ளி)
அம்பாளையும் முருகனையும் வணங்கி விரதம் அனுஷ்டிக்கப்படவேண்டும்.  நவக்கிரக சந்நிதியை வலம்வந்து சுக்கிர பகவானை வணங்கி 
navakirakam

பதிகங்கள்
மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்
தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம்
பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி !

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!

ஸ்லோகம்
ஹிமகுந்த மிருனாலாபம்
         தைத்யாணாம் பரமம் குரும்!
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்
         பார்க்கவம் ப்ரணமாம்யகம்!!

சுக்கிர (வெள்ளி) காயத்ரி
ராஜதாபாய வித்மஹே! ப்ருகு சுதாய தீமஹி!!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!

என்ற ஸ்தோத்திரத்தைப் பாடி வணங்குவதால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான் தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார்.

ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம். செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்


சனீஸ்வரன் (சனி) 
அஷ்டமத்தில் சனி இருப்பவர்களும் ஏழாண்டுச் சனி இருப்பவர்களும் வழிபட்டால் தொல்லைகள் குறைவதோடு நன்மையும் உண்டாகும். பெருமாளை வணங்கி நவக்கிரக சந்;நிதியிலே நவக்கிரகங்களை வலம்வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி

navakirakam
பதிகங்கள்
முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள் 
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.!

ஸ்லோகம்
நீலாஞ்சன ஸமாபாஸம்
         ரவி புத்ரம் யமாக்ரஜம்!
சாயா மார்த்தான்ட ஸம்பூதம்
         தம் நமாமி சனீஸ்வரம்!!

சனி காயத்ரி
சனீஸ்வராய வித்மஹே! சாயா புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!

என்று ஸ்தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுளும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை மிகவும் விஷேஷம்.

ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்


இராகுபகவான் (ராகு)
navakirakam

இராகு தோசமுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் காளி கோவிலுக்குச் சென்று வேப்பெண்ணெய் விளக்கேற்றி நவக்கிரக சந்நிதியில் இராகு பகவானை வேண்டி

பதிகங்கள்
வாகுசேர் நெடுமான் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே !

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி!

ஸ்லோகம்
அர்த்தகாயம் மகாவீர்யம்
        சந்த்ராதித்ய விமர்த்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
       தம்ராஹும் ப்ரனமாம்யகம்!!

ராகு காயத்ரி
ஸூக தந்தாய வித்மஹே! உக்ரரூபாய தீமஹி!!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!!

என்ற ஸ்தோத்திரம் பாடி வணங்குவதால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நீலம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.


கேதுபகவான் (கேது)
navakirakam
செவ்வாய்க் கிழமைகளில் விநாயரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்கி

பதிகங்கள்
பொன்னையின் னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய்
என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே !

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம், வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.!

ஸ்லோகம்
பலாஷ புஷ்ப ஸங்காஸம்
         தாரகா கிரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
        தம்கேதும் ப்ரணமாம்யகம்!!

கேது காயத்ரி
சித்ர வர்ணாய வித்மஹே! ஸர்ப்பரூபாய தீமஹி!!
தந்நோ கேது ப்ரசோதயாத்!!

என்று தோத்திரம் சொல்லி வணங்கிவர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும்.


ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்

நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

அஷ்டலட்சுமி

  அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்
  1. ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்
 ஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை பொங்கும் இருவிழிகள், நான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத முத்திரை இவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு தங்கக் கலசம் ஏந்தி இரு யானைகள் அபிஷேகம் செய்கின்றன. ஸ்ரீ தேவியின் இருபுறம் சாமரம் ஏந்திய பெண்களும் இருக்க, வெண்பட்டு அணிந்து ஸ்ரீ கஜலட்சுமி காட்சி தருகின்றாள். 


. ஸ்ரீ அஷ்டலட்சுமி
 தியான சுலோகம்:-                                         
சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
         வராபய கராந் விதாம்
அப்ஜத்வய கராம்போஜாம்
         அம்புஜாசநஸமஸ்த்திதாம்
ஸஸிவர்ண கடேபாப் யாம்
         ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
சர்வாபரண சோபாட்யாம்
         சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம்
சாமரக்ரஹ நாரீபி :
         ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
ஆபாதலம்பி வசநாம்
         கரண்ட மகுடாம் பஜே.

                                                                                                 





                                                                                         
 2. ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்

  இந்த தேவியானவள் அபயவரத முத்திரைகளுடன் தாமரைப் பூவில் அமர்ந்து, மலர்த்தோரணங்களால் சூழப் பட்டவள். பேரழகுடன் மஞ்சள் பட்டு அணிந்து அழகொளிரும் கிரீடம் சூடியவள். தன் இரு புறத்திலும் தீப சக்திகளைக் கொண்டவள் ஸ்ரீ ஆதிலட்சுமி இத்தகைய தன்மையுடன் விளங்கி எல்லா உயிர்களுக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். 



 ஆதிலட்சுமி
த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச
         சாபயாம் வரதாந்விதாம்
புஷ்யமாலாதராம் தேவீம்
         அம்புஜாசன சம்ஸ்த்திதாம்
புஷ்ப தோரண சம்யுக்தாம்
         ப்ரபா மண்டல மண்டிதாம்
சர்வ லக்ஷண சம்யுக்தாம்
         சர்வாபரண பூஷிதாம்
பீதாம்பரதராம் தேவீம்
         மகுடே சாரு பந்தநாம்
ஸ்தநோந்நதி சமாயுக்தாம்
         பார்ச்மயோர் தீபசக்திகாம்
செளந்தர்ய நிலையாம் சக்திம்
         ஆதிலட்சுமி மஹம் பஜே.


 3. ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்

 ஸ்ரீ சந்தானலட்சுமி தேவி தனது கரங்களில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவள். தன் மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும் சாமரமும் ஏந்திய பெண்களால் வணங்கப்படுகிறாள். 


சந்தானலட்சுமி


தியான சுலோகம்:- 
ஜடாமகுட சம்யுக்தாம்
         ஸ்த்தி தாசந சமந்விதாம்
அபயம் கடகஞ் சைவ
         பூர்ணகும்பம் புஜத்வயே
கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச
         மெளக்திகம் சாபிதாரீணீம்
தீபசாமர நாரீபி:சேவிதாம்
         பார்ச்வ யோர்த்வயோ
பாலே சேநாநி சங்காசே
         கருணாபூரி தாநநாம்
மஹாராஞ் ஞீஞ்ச சந்தான
         லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே

4. ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
இந்த தேவியானவள் சகல அணிமணிகளும் அணிந்து சுகாசனத்தில் உட்கார்ந்து, ஒளிரும் பேரழகுடன், தனது எட்டு கைகளிலும் சட்டரம், அம்பு, நிறைகுடம், வெற்றிலை, சங்கு, தாமரை, வில் ஆகிய இவைகளை ஏந்தி அடியார்களுக்கு அருளை வழங்குகிறாள்
சந்தானலட்சுமி
தியான சுலோகம்:-

கிரீட மகுடோ பேதாம்
         ஸ்வர்ண வர்ண சமந்விதாம்
சர்வாபரண சம்யுக்தாம்
         சுகாசந சமந்விதாம்
பரிபூர்ணஞ்ச கும்பஞ்ச
         தக்ஷிணேன கரேணது
சக்ரம் பாணஞ்ச தாம்பூலம்
         ததா வாம கரேணது
சங்கம் பத்வஞ்ச சாபஞ்ச
         கண்டி காமபி தாரிணீம்
சத்கஞ்சுக ஸ்தநீம் த்யாயேத்
         தன லக்ஷ்மீம் மநோஹரம்.

 - 5. ஸ்ரீ தான்யலட்சுமி ஸ்தோத்திரம்
 ஸ்ரீ தான்யலட்சுமி தலையில் ஒளிபொருந்திய கிரீடம் அணிந்து, கைகளில் செந்தாமரை, கரும்பு தாங்கி சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கின்றாள். எல்லாவிதமான அலங்காரங்களும் இவளிடத்தில் ஜொலிக்கின்றன. 



சந்தானலட்சுமி



தியான சுலோகம்:- 
வரதாபய சம்யுக்தாம்
         கிரீட மகுடோஜ்வலாம்
அம்புஜஞ் சேக்ஷீசாலிஞ்ச
         கதலீ பலத்ரோணிகாம்
பங்கஜம் தக்ஷவாமேது
         ததாநாம் சுக்லரூபிணீம்
க்ருபா மூர்த்திம் ஜடாஜீடாம்
         சுகாசந சமந்விதாம்
சர்வாலங்கார சம்யுக்தாம்
         சர்வாபரண பூஷிதாம்
மதமத்தாம் மநோஹரி
         ரூபாம் தான்யட்ரீயம் பஜே


 6. ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம்                                                                        இந்த தேவியானவள் சிம்மாசனத்தில் எட்டு கைகளுடன் அமர்ந்து, அந்தக் கரங்களில் கத்தி, பாடக்கயிறு, சக்கரம், அபயம், கேடயம், அங்குசம், சங்கம், வரதம் இவைகளுடன் காட்சி தருகின்றாள். அருகில் அன்னப்பறவையும் காணப்படுகிறது. எல்லாவித அலங்கார, தோரணைகளுடன் தலையில் கிரீடமணிந்து காட்சி தருகிறாள். 


சந்தானலட்சுமி



தியான சுலோகம்:- 
அஷ்ட பாஹீயுதாம்தே வீம்
         ஸிம்ஹாசன வரஸ்த்திதாம்
சுகாஸநாம் சுகேசீம்ச
         கிரீட மகுடோஜ்வலாம்
ச்யாமாங்கீம் கோமளாகாரம்
         சர்வாபரண பூஷிதாம்
கட்கம் பாசம் ததா சக்ரம்
         அபயம் சவ்ய ஹஸ்தகே
கேடகஞ் சாங்குசம் சங்கம்
         வரதம் வாமஹஸ்தகே
ராஜரூபதராம் சக்திம்
         ப்ரபா செளந்தர்ய சோபிதாம்
ஹம்சாரூடாம் ஸ்மரேத்
         தேவீம் விஜயாம் விஜயாப்தயே


 7. ஸ்ரீ வீரலட்சுமி ஸ்தோத்திரம்

 ஸ்ரீ வீரலட்சுமி தனது எட்டுக்கைகளிலும் அபயம், சக்கரம், சூலம், பாணம், வரதம், சங்கு, வில், கபாலம் ஏந்தி வெற்றி மாலையுடன் காட்சி தருகின்றாள். 





தியான சுலோகம்:- 
அஷ்டபாஹியுதாம் லக்ஷ்மீம்
         ஸிம்ஹாசந வரஸ்த்திதாம்
தப்த காஞ்சந சங்காசாம்
         கிரீட மகுடோஜ் வலாம்
ஸ்வர்ண கஞ்சுக சம்யுக்தாம்
         ச்சன்ன வீரதராம் ததா
அபயம் வரதஞ் சைவ
         புஜயோ:சவ்ய வாமயோ:
சக்ரம் சூலஞ்சபாணஞ் ச
         சங்கம் சாபம் கபாலம்
தததீம் வீரலக்ஷ்மீஞ் ச
         நவதாலாத் மிகாம் பஜே.


- 8. ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம்                                                                         தனது நான்கு கைகளிலும் அபயவரத முத்திரைகளுடன் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். இரண்டு யானைகளும் வழிபட்டு நிற்கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு, இந்த நான்கையும் தனது கைகளாக் கொண்டு ஸ்ரீ மஹாலட்சுமி தேவி காட்சி தருகின்றாள். 




தியான சுலோகம்:- 
சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம்
         கஜயுக்ம சுபூஜிதாம்
பத்ம பத்ராப நயனாம்
         வராபய கரோஜ்வலாம்
ஊர்த்வ த்வயகரே சாப்ஜம்
         தததீம் சுக்ல வஸ்த்ர காம்
பத்வாசநே சுகாஸீநாம்
         பஜே அஹம் சர்வ மங்களாம்.

அஷ்டலட்சுமி வழிபாடு செய்ய விரும்புகிறவர்கள் ஏதோ ஒரு நாள் பண்டிகையாக நினைக்காமல், தனது வாழ்வின் அன்றாடக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும். வீட்டில் வழிபடுவதோடு நிறுத்திவிடாமல், நேரம் கிடைக்கும் போது அல்லது வசதிப்படும் போது ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளியிருக்கிற புண்ய தலங்களுக்கும் அடிக்கடி புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
 மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது தின்னம்
அடுத்த பதிவில் சந்திப்போம்,நன்றி.